Sunday, June 27, 2010

புத்தகம் படிப்போம் வாரீர்…!


புத்தி திறக்கும் புத்தகத்தை
எத்தனைப் பேர் தினசரி படிக்கிறார்கள்…?
நான் விரல் விட்டு எண்ணும் முன்னே
தயவு செய்து புத்தகத்தை ஒரு முறை
திறந்தாவது பாருங்களேன்….!

ஒவ்வோர் எழுத்தாளனின் எழுத்தும்
பல நூறு விவரம் சொல்லும்….
வெவ்வேறு அர்த்தம் என்றாலும்
அதுபோல் சொர்கம்
வேறெதுவுமில்லை….!

எழுத்துக்கு நிகர் ஏது?
அதைப் படிப்பதற்கு தடை ஏது?
திறந்த வானமாய் புத்தகங்கள் விரிந்து கிடக்கு…
பரந்த மனதோடு
கொஞ்சம் அவற்றை படித்திடுவோம் வாரீர்….!

அனுபவமுடன்,
கயல்விழி

5 comments: