Sunday, June 27, 2010

உனக்கானவள் நான்!!!


ஜோதிடனுக்கே ஜோதிடம் சொல்வேன்....
முன் ஜென்மம் என்ன?
பின் ஜென்மம் என்ன?
ஏழேழு ஜென்மமும்
உனக்கானவள் நான் தான் என்பேன்....

உனைக் கண்ட நாள் முதல் தான்
உயிர்ப்பித்ததோ என் ஆன்மா இங்கு???
நீயின்றி அது
வெற்றிடம் ஆயிடுமோ???

என் விழியோடு புகுந்தவன்…
இதயத்தைக் களவாடிப் போனவன்…
காதலிக்காமலே எனக்கு
காதலைக் கற்பித்தவன்…..

எனக்கென நீயில்ல என்றாலும்
உனக்கென தான் நான்….
உடல் எங்குப் போனாலும்,
என் உயிர் மட்டும்
உனையே சேரும்….!!!!!

உயிர்க் காதலுடன்,
கயல்விழி

2 comments:

  1. அருமையான வரிகள்

    ReplyDelete
  2. கயல் ஏனிந்த சோகம்... காதல் தோல்வியா?

    ReplyDelete