Saturday, July 23, 2011

இன்னமும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்…


நான் “கயல்” என்பதால்

உன் வலையில் விழுந்தேனோ??

நழுவ நினைத்தும், கெட்டியாய்

தழுவிக் கொண்டாய்…

நீரில்லாமல் வாழ்ந்திடுவேனோ??

இருந்தும், உன் உமிழ் நீரில்

இன்னமும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்…

என்னுள் ஆக்சிஜன் இருப்பு முடியும் முன்னே,

எச்சிலூறும் முத்தங்கள் தந்துவிடு…!!!

----கயல்விழி மணியன்

“இலக்கியா"


இலக்கணங்கள் தகர்த்து கொஞ்சம்

இலக்கியமாய் காதல் செய்து

இலக்கணங்கள் ஒரு சேர

“இலக்கியா”…எங்கள் முதல் குழந்தை

பெற்றெடுப்போம்…!!!

---கணவன் மனைவி---