Saturday, August 21, 2010

குடைக்குள் நான்...!




ஜில்லென்று தென்றல்..
சொட்ட சொட்ட மழை..
இரு கைகள் விரித்து,
இரு கால்கள் துள்ள..
நனைந்த ஆடை,
என் அழகைச் சொல்ல..
ஈர உதட்டோடு,
காதல் செய்ய அவனோடு..
ஆசைதான்..
கொள்ளை ஆசைதான்..!
இருந்தும்
என் ஈரம் தாக்கி,
அவனுக்கு ஜுரமாகிவிடுமோ
என பயந்து
குடை விரித்தேன்..!
குடைக்குள்
நான்...!
அவள் ஆடைக்குள்
என்னவன்…!!!

-கயல்விழி