Thursday, February 16, 2012

நிலவு சொன்ன கதைகள்…


சன்னல் திறந்து வானம் பார்த்தேன்,

கார் முகில் ஊர்வலங்களோடு

எழில் மதி சொன்ன கதைகள்

ஆயிரம் ஆயிரம்...



இடுப்பில் சுமந்தபடி அம்மா

நிலாச்சோறு ஊட்டிய கதை…

நிலா நிலா ஓடி வா, நில்லாமல் ஓடி வா,

மழலையில் நான் பாடிய கதை…

காதல் வந்ததும்

நிலவோடு நானும் சேர்ந்து விழித்திருந்த கதை…

விண்ணில் நிலா அழகு –மண்ணில் நீ அழகு,

அவன் சொன்ன பொய் கதை..



இப்படி வாழ்வில் வந்து போன

கதைகளைச் சொன்ன நிலவே

உனக்கு நன்றிகள்

ஆயிரம் ஆயிரம்…

-கயல்விழி மணியம்

1 comment: