Saturday, November 27, 2010

ஒரு கைதியின் புலம்பல்


விண்ணுயரப் பறக்க ஆசைப்பட்டேன்;
எனினும்,
கண்ணாடிப் பேழையின் கைதியானேன்...
என் அழகில் பிரமிக்க
பூந்தோட்டம் சென்றிருக்கலாம்....
இப்படி அடைத்து,
சுவரில் மாட்டி,
என் துன்பத்தில்
குளிர் காய்வது ஏனோ???
இப்படியும் புலம்ப முடியாது
என் வாயிலும்
குண்டூசி சொருகி விட்டீரே....
வாயில்லா (பட்டாம்) பூச்சியானேன்.....!!!!

---கயல்விழி மணியன்

No comments:

Post a Comment