Saturday, September 18, 2010

உன் முதல் வாசகி & ரசிகை…


நீ எழுதி எழுதி
கிழித்தெறிந்த காகிதங்களில்
கால், பாதி, முக்கால் என இருக்கும்
உன் படைப்புகளின் ஒத்திகைகளை
ரகசியமாய் படித்திட ஆசை…

பிழை என்பதால்
கசக்கி கிழித்தெறிகிறாய்...
பிழை என்றாலும்
உன் கிறுக்கல்களில் புதையலை
கண்ட சிறுக்கியாய் நான்…

எழுதுகிறாய்…
தியானிப்பது போல தனிமையில்,
எழுதுகிறாய்…
நீ எழுதும் அழகை
மறைந்திருந்து ரசிக்கிறேன்
என அறியாமல்…

உந்தன்
ஒவ்வொரு படைப்பும்
எனைச் சந்தித்த பின்னர்தான்
கடித உறைக்குள்
தஞ்சம் கொள்ள வேண்டும்…

எனதுயிரே…
மனைவியாக உன்னால்
எல்லாம் சுகமும் காண்கிறேன்…
எழுத்தாளனே…
உன் முதல் வாசகி
உன் முதல் ரசிகை எனும்
சுகத்தையும் தந்து விடு…!!!

இவ்வண்ணம்,
கயல்விழி

1 comment:

  1. கவிதை அருமை... உங்கள் கவிதையில் ஏதோ ஒரு புத்துணர்ச்சி இருக்கிறது!! வாழ்த்துக்கள்!!

    ReplyDelete