Saturday, February 5, 2011

தாயுமானவளாய்


கண்ணாடி முன் நின்று பார்தாலும்
முன்னாடி உன் முகம் தான்…
என்னை உள்வாங்கிய
உன் உருவம்,
அன்பின் அருவமாய் என்னுள்ளே…
விண்தாண்டி வரவில்லை;
மண்தாண்டியும் வரவில்லை;
அன்புத் தாயின் கர்ப்பம் தாண்டி
எனக்காக வந்திருக்கிறாய்…
உன் தாய்க்கு ஈடாக
நான் ஆக மாட்டேன் என்றாலும்,
என் உருவில்- நீ
உன் தாயைக் காண முயற்சிப்பேன்….!!!!
---கயல்விழி மணியம்---

No comments:

Post a Comment