Thursday, February 3, 2011

மரண சாசனம்…


பூமியில் காலடி வைக்கையில்
வழி காட்டினாய்…
இங்கிருந்து திரும்பச்
செல்ல காத்திருக்கிறேன்…
அம்மா, நீ உடன் இல்லை….!
தட்டுத் தடுமாறி நடக்கையில்
கைப் பிடித்தாய்…
இன்று நடக்கவே இயலாமல்
செயலிழந்து கிடக்கிறேன்….
அப்பா, நீ உடன் இல்லை…!
காதல் எனை அணைக்கையில்
இதயம் தந்தாய்…
உடல் கெட்டு
இன்று நான் படுக்கையில்….
அன்பே, நீ உடன் இல்லை…!
அழகான வாழ்க்கையில்
அன்பின் பரிசாய் கிடைத்தாய்…
இன்று நான்
வாழ்க்கையின் விளிம்பில்….
மகனே, நீ உடன் இல்லை;
எனை வெறுக்கும் மருமகளுடன்....!

No comments:

Post a Comment