Monday, May 24, 2010

முன் ஜென்மத்து பந்தமோ?????


"வணக்கங்க....இப்போகூட நானே தான் பேசுறேன். நீங்க பேச மாட்டுறிங்களே...????" என்றான் அவன் அவளைப் பார்த்து. புன்னகையையே பதிலாகத் தந்தாள் அவள்.

ஒரே துறையில், ஒரே நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள். அவன் பணி ஒலியில்; அவள் பணி ஒளியில். என்ன புரியவில்லையா??? ரகசியமாகவே இருக்கட்டுமே.

இதுவரை அவர்கள் இருவரும் நேரில் பேசிக்கொண்டதில்லை. FACEBOOK-க்கில் அறிமுகமாகி பல மாதங்கள் ஆகிய பிறகே நேரில் அன்று சந்தித்தார்கள். அதுவும் தற்செயலாக. தற்செயலாக இருந்தாலும், அவள் வாழ்க்கையில் அது ஒரு நற்செயலாகவே விளங்கியதாக அவளுக்கு இன்னமும் ஓர் எண்ணம். அவனைப் பார்த்த அந்த நிமிடத்தில் அவன் இரு விழிகளில் தன் முன் ஜென்மத்தைப் பார்த்தது அவளது கயல்விழிகள்.

ஏற்கெனவே அவனைப் பார்த்ததில்லை; பேசியதும் இல்லை; அட, சொந்தமும் இல்லை. ஆனால், கால காலமாக அவனிடம் வாழ்ந்ததுபோல அவளுக்கு நெஞ்சுக்குளியில் எதோ ஊற்றெடுத்தது. அவனுக்கு எப்படியோ, அது அவளுக்கு தெரியாது.

முன்பு, FACEBOOK-கில் அவனது படைப்புகளை ரசித்தவள், முதன் முறையாக அன்று அவனையும், அவனது பேச்சையும் ரசிக்க ஆரம்பித்தாள். பூச்செடிக்கு முன்னால் நின்றிருந்தவளைப் பார்த்து அந்தப் பூச்செடியில் இருந்த பூக்களுக்கு நிகராக அவளை வர்ணித்து பேசியதை இன்னமும் அவள் மறக்கவில்லை. "உண்மையாத்தான் வர்ணிக்கிறானா?????" என அவள் மனம் தன்னைத்தானே கேட்டுக்கொண்டது அன்று.

பத்து நிமிடங்கள் படபடவென அவன் பேசிய வேளையில், அவள் பதிலுக்கு பேசிய வார்த்தைகளை விரல் விட்டு எண்ணலாம். அய்யோ வாயாடியம்மா அவள் என அவளைப் புகழ்ந்து தள்ளியவர்கள், அன்று அவன் முன் அவள் ஊமையாகி நின்றதைப் பார்த்திருந்தால், இது கனவா, நனவா என தங்களைக் கிள்ளியே பார்த்திருப்பார்கள்.

"இன்று நின்று பேசுகிறோம்.வரும் காலத்தில் நம் சந்திப்பு நிர்ணயிக்கப்படுமானால், அன்று உட்கார்ந்து தேனிர் அருந்திக்கொண்டே பேசலாம்" என்றான் அவன் விடைப்பெறுமுன்.

விடைப்பெற மனம் இல்லை என்றாலும் அவனது உடலுக்கு விடைக்கொடுத்தவள், அவனது இதயத்திற்கு விடைக்கொடுக்க விரும்பாமல், அதைத் தன்னுள் உள்வாங்கிக் கொண்டாள்.

"ஹேய், காதலா??" என்றது அவளது மனசாட்சி. "சேச்சே...இல்ல.. அப்படிலாம் ஒன்னும் இல்ல...அவன் யாருனே தெரியாது. நீ வேற" என்றாள் சற்று தயங்கியவளாக அவள். "அப்போ ஏன் அவன் BYE சொன்னப்போ, உன் மனசு அப்படி தவிச்சது டீ?" என்று மேலும் வினவியது மனசாட்சி. "நீ ரொம்ப கேள்வி கேக்குற? பேசாம உன் வேலையைப் பார்த்துக்கிட்டு போறீயா..." என மிரட்டினாள் அவள். "PLEASE,,PLEASE சொல்லுடா மா..." என மனசாட்சி கெஞ்சியது. மனசாட்சி மேல் பரிதாபப்பட்டவளாய் அவளும், " என்னமோ தெரியல.. அவனைப் பார்த்ததும் என்னமோ தோணுது.. நீ தப்பா நெனைக்காதே.. இது வயது கோளாறு இல்ல.. SOMETHING MIRACLE.. யாருனே தெரியாது.. ஆனா, அவன் மேல பாசம் எப்படி வந்துச்சு...? அதுவும் பார்த்ததுமே? ஒருவேள முன் ஜென்மத்துல அவன் என் புருஷனோ????????" என்றாள்.

2 comments:

  1. கொடுத்துவைத்தவர்கள் நீங்கள்........

    ReplyDelete
  2. அருமையான தொகுப்பு

    ReplyDelete