
என் ஸ்பரிசம் பட்டு
பழைய புத்தக அலமாரியில்
படிந்த தூசுகள்
பறந்ததுவோ என்னவோ…
நான் வெகு நாட்களாய்
தேடிய “குறிஞ்சி மலர்” நாவலில்
மறைந்திருந்த கடிதவுறை
மனம் திறந்தது…!!!
‘அன்புள்ள கயல்விழிக்கு’
என ஆரம்பி்த்து,
‘உன் பதிலுக்காக ஏங்கும், இளம்பரிதி’
என முடிந்த கடிதம்
காதல் மழை பொழிந்தது;
இங்கே என் விழிகளில்
கண்ணீர் திவலை வழிந்தது…!!!
ஏழாண்டுகள்…
ஒரு நல்லவனின் காதல்
மறைக்கப்பட்ட வருத்தத்தைவிட,
ஆறாண்டுகளுக்கு முன்
விபத்தொன்றில் அவன்
மறைந்தது,
வேதனையிலும்
வேதனை தந்தது…!!!
மேலும் எழுத இயலாமல்,
கயல்விழி மணியன்


